written by khatabook | December 4, 2019

சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN) செயல்பாடுகள்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்பது இந்தியா எப்பொழுதும் கண்டிராத வகையிலான மிக விரிவான வரி மாற்றங்களில் ஒன்றாகும். இது வரிகளின்  ஆதிக்கத்தை  முழுவதுமாக உயர்த்தியுள்ளதுடன், பிஸ்னஸ்களை  நடத்துவதற்கும் அவர்களின் வரிகளை செலுத்துவதற்கும் தெளிவான மற்றும் வெளிப்படையான வழியை வழங்கியுள்ளது.

பழைய முறையின் படி , அரசாங்கத்தின் கீழ் உள்ள தனிப் பிரிவுகள் பல்வேறு வகையான வரிகளைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டியிருந்தது.இது பிஸ்னஸ்களுக்கு குறிப்பாக அதிக மனிதவளம் இல்லாத சிறுத்தொழில் செய்வோருக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியது.

சரக்கு மற்றும் சேவை வரியின் வருகையுடன், ஜிஎஸ்டி ஒரு மைய அதிகாரத்தின் கீழ் இருப்பதால் இது மிகவும் எளிதாகிவிட்டது. வணிகங்களால் செய்யப்பட்ட வரித் தாக்கல்களைக் கணக்கிட்டு, வசூலித்துப் பதிவுசெய்ய ஒரு அதிகாரத்தின் கீழ் முழு அமைப்பும் உட்படுத்தப்பட்டுள்ளது.

வரி வசூலிக்கும் இந்த முறையின் முதுகெலும்பு ஜி.எஸ்.டி.என் அல்லது சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் ஆகும். முற்றிலும் டிஜிட்டலாக மாறுவதால், சரக்கு மற்றும் சேவை வரி முறையையும் டிஜிட்டலாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் என்பது வரிகளை வசூலிக்க மற்றும் தாக்கல் செய்ய ஜிஎஸ்டி அமைப்பிற்கு தேவையான கணக்கீடு வளங்களை அளிக்கும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பாகும். இதனைப் பராமரிப்பது தேசியத் தகவலியல் மையமாகும்.

                                                                        

                                                 

 

இந்த ஜிஎஸ்டி போர்டல் வரித்துறை அதிகாரிகளுக்கு அணுகதக்கதாக உள்ளது. வரி செலுத்துபவர்களின் தகவல்களையும் பரிவர்த்தனைகளின் முழு விவரங்களையும் அது வழங்குகிறது. இது அரசாங்கத்திற்கும் சில அரசு சாரா நிறுவனங்களுக்கும் சொந்தமானது.

ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க்கின் செயல்பாடுகள்

ஐ.டி உள்கட்டமைப்பு:

ஜிஎஸ்டிஎன்னின் முக்கிய நோக்கம் ஜிஎஸ்டி அமைப்புக்கு தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குவதாகும். சப்ளையர்கள், வரி அதிகாரிகள், வரி செலுத்துவோர் போன்ற மிகப்பெரிய ஒரு உள்கட்டமைப்புக்கு   பாதுகாப்பான ஒரு பெரிய நெட்வொர்க் தேவைப்படுகிறது, இந்த காரணத்திற்காக ஜிஎஸ்டிஎன்  பிரத்யேகமாக அமைக்கப்பட்டது.

பல்வேறு வரி அமைப்புகள் மாறுபட்ட பலவித தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைக்க பட்டிருப்பதால் , இது நன்கு செயல்பட வலுவான கட்டமைப்பு தேவைப்படுகிறது.

தகவல் பகிர்வு

முழு நாட்டையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான மற்றும் சிக்கலான அமைப்பு அமல்படுத்தப்படுவதால், இந்த தகவல்களை அணுக வேண்டிய துறைகள்  எண்ணிக்கை மிகப்பெரியது. மத்திய அரசுகள், மாநில அரசுகள், வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த  தரவுத்தளத்தையும் அமைப்பையும் அணுகக்கூடியவை ஆகும்.

                                                                                             

   இந்த அளவிலான தகவல் பகிர்வு பாதுகாப்பான முறையில் ஒரு பிரத்யேக வரி நெட்வொர்க்குடன் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். எனவே, ஜிஎஸ்டிஎன் நாட்டிற்கு பாதுகாப்பான தகவல் பகிர்வு வலையமைப்பை வழங்குகிறது.

வரி செலுத்துவோர் அமைப்பு

ஜிஎஸ்டி அமைப்பின் முனைப்பான பகுதிகளில் ஒன்று வரி செலுத்துவோரும் பிஸ்னஸ்களும் ஆகும். வரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கணக்கிட்டு தாக்கல் செய்ய பிஸ்னஸ்களுக்கு ஒரு பாதுகாப்பான தளம் தேவை. வரி செலுத்துவோருக்கு அவர்களின் வணிகம் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கையாள ஒரு போர்ட்டலை ஜிஎஸ்டி வழங்குகிறது.

ஜிஎஸ்டி சுவிதா சேவைகள்

                                                                                                                                

வரி நெட்வொர்க்குடன் இணைந்து மேலும் டிஜிட்டல் பயன்பாடுகளை உருவாக்க அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பல புதிய டிஜிட்டல் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் வணிகங்களுக்கு உதவுகின்றன. ஜி.எஸ்.டி.என் தொடர்பான சேவைகளுக்கு ஜிஎஸ்டி சுவிதா சேவைகள் முதுகெலும்பாக இருக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

                                                                                                                

ஜி.எஸ்.டி.என் பல வகையான பங்குதாரர்களின் வரிவிதிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செய்ய அனுமதிக்கிறது. இதனால் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில் தரங்களை உருவாக்க முடிகிறது. நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் வரி ஆரம்பகட்டத்தில் இருப்பதால்  , அதிக அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேற்கொள்ளப்படுவது பொருளாதாரத்திற்கு சிறந்தது.

பின்தளத்தில் தொழில்நுட்ப சேவைகள்

நம் நாட்டின் வரி துறைகளில் தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது மெதுவாக நிகழ்கிறது , மேலும் தங்கள் பணிகளுக்கு காகித ஆவணங்களையே பெரும்பாலும் நம்பியுள்ளது . இது திறமையற்றது மட்டுமல்லாமல் ,பல ஆவணங்கள் அழிந்துபோவதால் வரி செலுத்துவோருக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றன.

ஜி.எஸ்.டி.என் இவற்றை மாற்றியுள்ளது, ஏனென்றால் நெட்ஒர்க் வரி துறையை முழுவதுமாக பரவி அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மேலும் திறன்பட செயல்படுத்துகிறது . நெட்ஒர்க்கை பொறுத்தவரை சில சிக்கல்கள் உள்ள போதும் , நிரந்தர பயன்பாட்டிற்கு இவை சீர்செய்யப்பட வேண்டும்.

எதிர்கால திட்டமிடல்

நாடு முழுவதும் டிஜிட்டலை சார்ந்து வருவதால், ஏராளமான வணிகங்கள் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றன. வரி இணக்கத்தை சிறப்பாக செய்ய இது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. ஒரு முழுமையான டிஜிட்டல் அரசாங்க சேவைக்காக ஜி.எஸ்.டி.என் சோதனையாக பயன்படுத்தப்படுகிறது.

மிக பிரமாண்ட மற்றும் சிக்கலான இந்த நெட்ஒர்க்கை , தகுந்த முறையில் பயன்படுத்தினால் , அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கத்திற்கு முக்கியமான தகவலை வழங்கும்.

பேரழிவு மீட்பு

சைபர் தாக்குதல்கள் நவீன உலகில் இப்போது வழக்கமாக உள்ளன. எல்லா இடங்களிலும் ஹேக்கர்கள் வங்கிகள், ஏடிஎம் மற்றும் பிற டிஜிட்டல் நிதி சேவைகளில் தந்திரமாக தகவல் மற்றும் பணத்தை திருட முயற்சிக்கின்றனர்.

சைபர் தாக்குதலை சமாளிக்க ஒரு வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது, அதனால்தான் ஜிஎஸ்டிஎன்னின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக நாட்டின் நிதி சேவைகளை நிர்வகிப்பதில் திறன்மிக்க தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க்கை வழங்குவதாக இருக்கிறது.

                                                                                             

இயற்கை பேரழிவுகள் நவீன உலகில் அதிகரித்து வரும் மற்றொரு அச்சுறுத்தலாகும். வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் புயல்கள் போன்றவை அபாயமானதாகவும்  நிறைய சேதங்களை ஏற்படுவனதாகவும் உள்ளன. காப்புப்பிரதி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான ஒரு வலுவான அமைப்பு முக்கியமானது, இது ஜிஎஸ்டிஎன்னின் முக்கிய செயல்பாடாகும்.

ஆகவே, சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் ஜி.எஸ்.டி தொடர்பாக நிதி பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான அமைப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இது வரி செலுத்துவோர் மற்றும் வரி விதிக்கும் அதிகாரத்தை வெளிப்படையான முறையில் இணைக்க உதவுகிறது.

மேலும் ஜி.எஸ்.டி.என் வரிகளை பாதுகாப்பான முறையில் செலுத்தவும் , தங்களுக்கு தேவையான தகவலை அறியவும் அனுமதிக்கிறது. இது நடைமுறையில் உள்ளது , மேலும் ஜி.எஸ்.டி.என்னின் ஏதிர்கால நோக்கத்திற்கேற்ப பல மாற்றங்கள் கொண்டு வரப்படலாம். நமக்கு வழங்கப்படுவதை என்ன என்று தவறாமல் சரிபார்ப்பது மிகவும் முக்கியமாகும்.

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.
மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.